அதிக மதிப்பெண் எடுப்பது !எப்படி ?...


இன்றைய சமூகசூழல் ஒரு மாணவனின் அறிவாற்றலை அவன் பெறும்மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒருமாணவனின் ஒட்டுமொத்த வாழ்க்கை சூழலையும் அல்லது குறைந்தபட்சம் பலஆண்டுகளுக்காவது தீர்மானிக்க கூடியதாக உள்ளது.
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அந்த மாணவன் தன்கல்விக்காக வருங்காலங்களில் செலவிடப்போகும் பணத்தை, அவன்தந்தையோ, தாயோ படப்போகும் சிரமத்தை தீர்மானிக்கிறது.
இச்சூழ்நிலையில் மாணவர்கள் கல்வியின் ஆற்றலை உணர வேன்டும்.மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக மதிப்பெண்களை எடுக்கமுயற்சிக்க வேண்டும்
படிப்புக்கும் நமக்கும் தூரம் அதிகம்
பெரும்பாலான மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. அதற்கு காரணம்என்ன? ஒரு விஷயத்தில் ஆர்வம் இல்லாததற்கு காரணம் அதனுடையவிளைவுகள் தெரியாதுதான். படித்தால் என்ன நடந்து விடப் போகிறது என்றுசிலர் நினைக்கிறார்கள் படிப்பினால் உயர்வு பெற்ற பலரை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.
நிச்சயமாக ஒவ்வொருவர் வீட்டிலும் அல்லது வீட்டுக்கு அருகிலும் படிப்பால்தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தி கொண்டவர்கள் பலர் இருப்பார்கள்.அவர்களை எண்ணிப் பார்க்கவேண்டும்.
எந்த ஒன்றையும் விரும்பி செய்தால் அதில் வெற்றி பெற முடிகிறது. பல பேர்சினிமா பாடல்களை முழுவதுமாக மனப்பாடமாக பாடுவதற்காக காரணம் கூட அதை அவர்கள் அதிகம் விரும்புவதுதான்.
தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் சினிமாவை விரும்பும்  மாணவர்கள்இனிமேல் படிப்பையும் விரும்ப முயற்சிக்க வேண்டும், படிப்பைவிரும்பத்தக்கதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்துகாண்போம்
ஆர்வம் இருந்தால் வலி தெரிவதில்லை
ஒரு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும் மாணவன் எத்தனை தடவைவிழுந்தாலும், காயம் ஏற்பட்டாலும், வலியை பொருட்படுத்தாமல் விடாமல்முயற்சித்து கற்றுக் கொள்வதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான ஆர்வம்.
நீச்சல் கற்று கொள்ளும் மாணவன், அதனால் ஏற்படும் உடல் வலியையோ,மூச்சுத் திணறலையோ பெரிது படுத்தாமல் தொடர்ந்து முயற்சித்து நீச்சல் கற்றுகொள்வதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான ஆர்வம். அந்த ஆர்வம் ஏன்படிப்பில் இல்லை. நல்ல விஷயங்கள் எப்போதுமே உடனடியாக மனிதர்களுக்குபிடிக்காது. அது மனிதஇயல்பு.
சிலபேருக்கு பாகற்காய் பிடிக்காது. கண்டாலே பத்து அடி ஓடுவார்கள். ஆனால் ஒரு டாக்டர் சொல்லுவார் "உங்க உடம்பு பிரச்சினை தீரனும்ன பாகற்காய் மட்டும்தான் சாப்பிடனும் இல்லைனா உங்களுக்கு நாம காரண்டி இல்ல" இதன் பிறகு முதலில் வெறுப்போடு பாகற்காயை சாப்பிட தொடங்குவார். அதன்பின் பாகற்காய் ரொம்ப அவருக்கு பிடிச்சு போயிடும்.. அது இல்லாமல் உணவே இறங்காது. அதுபோல் தான் படிப்பும். ஆனால் அது இவ்வளவு கசப்புடையதல்ல. பாகற்காய் போல் படிப்பு கசப்பதும் தேன் போல் இனிப்பதும் நம் மனதில் தான்உள்ளது..
படிப்பு எப்படி இனிக்கும் ...?
விடாமுயற்சி வெற்றியின் முதல் படி
நம் மாணவர்கள் செய்யும் பெரும் தவறு ஒரு பாடம் வரவில்லை என்றால் அதை ஒட்டு மொத்தமாக தூக்கி எறிந்து விடுகின்றனர். அந்த புத்தகத்தையே தீண்டுவது கிடையாது. இவ்வாறு இருப்பது சரியா? படிப்பு என்பது முதலில் பிடிக்காவிட்டாலும் போக போக பிடிக்கஆரம்பிக்கும். உதாரணதுக்கு கணக்கு பல பேருக்கு பிடிக்காத ஒரு பாடம் இத கண்டுபுடிச்சது யாரு என்கின்ற வாசகத்தை பல பேர் உச்சரிப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு காரணம், தனக்கு வராது என்று நம் மனதில் நீங்கள் போட்டுக் கொள்ளும் தவறான விதை அதுவே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒட்டுமொத்த மனதையும் ஆக்கிரமித்து விடுகிறது. அந்த பாடத்தை நம்மிடமிருந்து வெகு தூரத்திற்கு அழைத்து சென்று விடுகிறது
இவரால் முடிந்தது உங்களாலும் முடியும்
எந்த மனிதனும் தோற்க விரும்ப மாட்டான். அதனால் தான் எந்த படிப்பு சிரமமோ அதை வெறுக்கிறான். காரணம் தோற்று விடுவோம் என்ற பயம். அதன் பிறகு மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற வெட்கம். இந்த பயமும், வெட்கமும் தான் உங்களின் முதல் எதிரி. நம்மால் முடியாது என்று நினைத்து விட்டால் ஒரு குழந்தை எழுந்துகூட நிற்க முயற்சிக்காது. மற்றவர்கள் சிரிப்பார்கள் என்று நினைத்தால் எத்தனை தடவை விழுந்தாலும் நடக்க முயற்சிக்கிறதே அவ்வாறு முயற்சிக்காது. இறைவன் எல்லா குழந்தைகளிடமும் இயற்கையாவே தந்துள்ள விடாமுயற்சி எனும் இப்பண்பை நாம் தான் தொலைத்து விட்டோம்.
ஒரு முறை படித்தால் புரியாத பாடம் பல முறை முயற்சித்தால் புரிந்தேதீரும். எழுதிப்பாருங்கள். நன்றாக படிக்கும் நண்பர்களிடம் கேளுங்கள். ஆசிரியர்களிடம் உதவி தேடுங்கள்.மாணவர் அணியை தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு தெரிந்து 9 ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் பெயில் ஆன மாணவன் ஒருவன் 10 ஆம் வகுப்பில் 93% மதிப்பெண் எடுத்தார். அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தார். காரணம் ஒன்றே ஒன்று தான் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு.
எப்படிபடிப்பது
மனப்பாடம் செய்யும் பழக்கம் மாணவர்களை நல்ல திறமையுள்ள மனிதர்களாகஉ ருவாக்காது. புரிந்துகொண்டு படித்தால்
நீண்டநாள் உங்கள் மனதில் நிற்கும். எனவே முடிந்த வரையில் புரிந்து கொண்டு படிக்க முயற்சியுங்கள். நன்கு படிக்கும் மாணவர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும். படிப்பவை மனதில் நிற்க உடனடியாக எழுதிப்பாருங்கள். எழுதும்போது உங்களுடய தவறுகள் புலப்படும். மறக்காது.கணக்கு எனக்கு வராது என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள். கணக்கை போன்று எளிதான பாடம் கிடையாது. உண்மையிலேயே அதிகமதிப்பெண் பெற எளிய பாடம் கணக்கு. தொடர்ந்து செய்யும் பயிற்சி தான் அதை எளிதாக்குகிறது. 9 ஆவதில் தோல்வி அடைந்த ஒருவரைப் பற்றி சொன்னது நினைவிருக்கும். அவர் பெற்ற மொத்த மதிப்பெண் 5 பாடமும் சேர்த்து 75 மதிப்பெண் (15 %). ஆனால் அவர் பொதுத்தேர்வில் கணக்கு பாடத்தில் 99% மதிப்பெண்எடுத்தார். இதுகதையல்ல நிஜம். ஒவ்வொரு பாடத்திலும் கடை பிடிக்க வேண்டிய பொதுவான விதிகளை கீழே காண்போம்
கணக்கு :
கணக்கில் உள்ள ஃபார்முலாக்களை எழுதி வைத்து மனப்பாடம் செய்யுங்கள். அதற்கென்று தனி நோட்டு போடுங்கள். கணக்குகளை எழுதி எழுதி பயிற்சி செய்யுங்கள் முதலில் தவறானாலும் தொடர்ந்து முயற்சியுங்கள். இது நம் வாழ்க்கையை தீர்மானிக்கபோகும் ஒரு களம் என்பதை மனதில் வைத்து தொடர்ந்து முயற்சிக்கும் போது பதில் வந்தே தீரும்.
அசிரியர்களின் மற்றும் நன்றாக படிக்கும் மாணவர்களின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குழுவாக அமர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். ஒருவர் சோர்ந்து போகும் போது மற்றவர் தேற்ற வேண்டும். இவ்வாறு முயற்சித்தவர்கள் பல பேர் வென்றிருக்கிறார்கள்.
தமிழ், ஆங்கிலம் :
தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களை இலக்கணப் பிழை இல்லாமல் எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும். அதற்கு என்ன செய்ய வெண்டும்? மனப்பாடம் செய்வது, எழுதிப் பயிற்சிப்பது ஒருமுறை.. இலக்கணத்தை நன்றாக கற்றுக் கொண்டு உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுவது இரண்டாவது முறை. எந்த முறை உங்களுக்கு வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.
அறிவியல் :
அறிவியல் பாடங்களில் வரும் விதிகள் போன்றவற்றை நம் சொந்தவார்த்தையில் எழுதக்கூடாது. மாறாக புத்தகத்தில் உள்ளது போல் மனனம் செய்து அப்படியே எழுதவேண்டும். மற்றகேள்விகளை பொருளையும், பெயரையும் மாற்றாமல் உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதவும்.
ஒரு கேள்வியை படிக்கும் போதே அதை பகுதி பகுதியாக பிரித்துப டிக்கவும். revision செய்வதற்கு வசதியாக ஒரு நோட்டில் குறிப்புகள் எடுத்து கொள்ளவும் அதாவது ஒரு பக்க பதிலை கால் பக்கத்திற்கும் குறைவாக இருப்பது போல் முக்கிய வார்த்தைகளை வைத்து (hint) குறிப்பு எடுத்து கொள்ளவும். இது பரீட்சைக்கு படிக்கும் இறுதி நேரத்தில் உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தும். படங்களை அழகாக பாகங்கள் குறித்து வரைந்து பழகவும்.
சமூகஅறிவியல் :
சமுக அறிவியல்பாடங்களில் உள்ள ஆண்டுகளையும் நாடுகள் மற்றும் முக்கியமானவர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தனிநோட்டுப் போட்டு அவற்றை எழுதிப் பாருங்கள்.
படிப்பது ஒரு முறை என்றால் அதைப் பரிட்சையில் வெளிப்படுத்துவது மற்றொருமுறை. பரிட்ச்சையில் எவ்வாறு எழுதினால் அதிக மதிப்பெண்களை பெறலாம் என்பதற்கான குறிப்புகளும் சிலநுணுக்கங்களும் கிழே தரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டிலேயே பயிற்சி செய்து பார்ப்பதன் மூலம் பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற இயலும்.
1. படித்ததை எல்லாம் வெளிப்படுதுவதற்கு அல்ல தேர்வு. தேவையானவற்றை தெளிவாக உணர்த்துவது தான் நல்ல விடைகள்.
2. அதிகமாக எழுதினால் தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் எனும் தவறான மனப்பான்மைமாணவர்களிடம் காணப்படுகிறது, அதிகபக்கங்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுத் தராது.
3. வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதுவமாக எழுதி முடித்தவுடன் வினாவை மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும் வினாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கதை மட்டும் படித்து விட்டு எழுதியதால் இதுபோன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே வினாத்தாளை முழுவதுமாக வாசிக்க வேண்டும்.
4. பத்து நிமிடங்கள் எந்த வினாவிற்கும் பதில் எழுதாமல் நன்கு தெரிந்த வினாக்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
5. எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியும் என்றால் அவற்றில் நன்கு தெரிந்த பதிலை முதலில் எழுதுவது நல்லது. திருத்துபவர் மனதில் முதலில் ஏற்படுத்தும் தாக்கம் சிறந்த தாக்கமாக அமையும் (the first impression is the best impression). எனவே நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதுவது நல்லது.
6. நன்றாக தெரிந்த வினாவிற்கு தேவைக்கு அதிகமாக எழுதி தேர்வின் பாதி நேரத்தை வீணடித்து விடக்கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்க வேண்டும்.
எக:- 3 மணி நேரம் பரீட்சை என்றால் 10 நிமிடம் - கேள்விதாளை முழுவதுமாக ஒரு பார்வை பார்க்க . 5 நிமிடம்- தெரிந்த விடைகளை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்த.. அடுத்து ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்கி எழுத வேண்டும்.
7. பொதுதேர்வுக்கு முன் பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கூறிய முறையை பயிற்சி செய்து கொள்ளவும். அழகான கையெழுதுக்காக பயிற்சி செய்யவும், அழகிய முறையில் எவ்வாறு தேர்வு எழுதுவது என்பதையும் காண்போம்.
8. தேர்வில் அழகாக, மற்றும் தெளிவாக எழுதுவதன் மூலமாக திருத்துபவரின் சிரமம் குறைகிறது. அவர் சிரமம் குறைந்தால் நம் மதிப்பெண் அதிகரிக்கும்.
9. பரிட்சை தாளை திருத்துபவர் எல்லா பலவீனங்களும் கொண்ட மனிதன் என்பதால் அழகாக எழுதும் குறைந்த பட்சம் தெளிவாக எழுதும் மாணவர்கள் அதிகமதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. எழுத்தைக் கொண்டே ஒருவருடைய மனப்பான்மையை ஒரு வகையில் யூகிக்க முடிகிறது என்று கூறுகிறார்கள். அதிக அடித்தல் திருத்தலுடன் எழுதுவது ஒருவருடைய நிலையற்ற மனப்பான்மையையும் அவர் சரியாக படிக்கவில்லை, பயிற்சி செய்ய வில்லை என்பதை எளிதில் காட்டிவிடும்.
10. அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதற்கு பெரும் சாதனை செய்ய வேண்டியதில்லை. பொதுதேர்வு தொடங்க இன்னும் நாட்கள் உள்ள இந்த தருணத்தில் வெறும் படிக்க மட்டும் செய்யாமல் படித்ததை சிரமம் பர்க்காமல் எழுதிவிடுவது நாம் பரிட்சையில் செய்யும் பல தவறுகளை நமக்கு அடையாளம் காட்டிவிடும். பயிற்சித் தேர்விலும் பொதுத்தேர்விலும் கீழ்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலமாக சிறந்த முடிவுகளை பெறமுடியும்.
ஒவ்வொரு வார்தைக்கும், வரிக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டு எழுதவும்.
• ஒரு பதிலில் உள்ள முக்கியமான கருத்துக்களை அடிகோடிட்டு காட்டவும்.
• அடிக்கோடிடுவதற்கு 2B என்ற கருமை அளவுடைய பென்சிலை உபயோகிப்பது நல்லது. வண்ண எழுதுகோல்கள் (SKETCH PEN / PENCIL) உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. ஏனெனில் முட்டாள்தனமான வண்ணங்களை அடிக்கோடிட உபயோகிப்பது திருத்துபவரின் எரிச்சலை கூட்டும். நம் மதிப்பெண்ணை குறைக்கும். எனவெ சற்று கூடுதல் கருமையான (2B) பென்சில்களை உபயோகிப்பது நல்லது.
• அறிவியல் பாடங்களில் வரையும் படங்களை அழகாக வரைவதுடன் அனைத்து பாகங்களையும் கட்டாயம் குறித்து காட்டுங்கள். முடிந்தால் நகல் எடுத்தது போல் வரைவது நல்லது. (இதற்காக அதிகநேரத்தை வீணாக்க வேண்டாம்).
• முதல் கேள்வியில் அழகாக எழுதத் தொடங்கி, செல்ல செல்ல கோழிக்கிறுக்கலாக மாறிவிடக்கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்கி எழுதுவதன் மூலமாக தேர்வின் கடைசி நிமிடத்தில் நடைபெறும் இதுபோன்ற தவறுகளை திருத்திக் கொள்ளலாம். கடைசி நிமிடம் வரை படிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
11. எவ்வாறு கேள்வித்தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்க கூடாதோ அதைப் போலவே கடைசி வினாடி வரை எழுதக்கூடாது. குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்னதாக எழுதி முடித்து விட்டு கீழ்க்கண்டவற்றை சரிபார்க்கவும்.
• ஒவ்வொரு பதிலுக்குமான கேள்வியின் எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரிபார்க்கவும் இது மிக மிக முக்கியம்.
• ஒவ்வொரு பதிலிலும் முக்கியமான புள்ளிகள் அடிக்கோடிடப்பட்டுள்ளதா என்பதை சரிபர்க்கவும்.
• கணிதமாக இருந்தால் விடையின் கடைசியை அல்லது தீர்வை அடிக்கோடிட்டு உள்ளீர்களா என்பதை சரிபார்க்கவும்.
• சூத்திரங்கள் பெட்டிக்குள் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
12. மிகவும் முக்கியாமான ஒன்றை கவனத்தில் கொள்ளவும். எக்காரணம் கொண்டும் 786(!), நாகூர் ஆண்டவர் துணை (!) பிஸ்மில்லாஹ், முருகன் துனை, போன்ற வாசகங்களை விடைத்தாளில் எழுதவேன்டாம். இது முதல் பார்வையிலேயே உங்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தலாம். திருத்துபவர் மாற்று நம்பிக்கையாளர் ஆகவோ அல்லது இறைநம்பிக்கை அற்றவராக இருக்கும் பட்சத்தில் இவை எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே பக்தியை எழுத்தில் காட்டாமல் மனதில் நினைத்து எழுத தொடங்கி விடுவது நல்லது.
குறிப்பு: 786, நாகூர் ஆண்டவர் துணை என்பதெல்லாம் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரானவை.
13. எல்லாவற்றிக்கும் மேலாக கடின உழைப்பும், அதிகமாக பயிற்சி தேர்வுகளை எழுதுவதும் உஙகள் மதிப்பெண்களை கூட்ட உதவும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிய பிரார்த்திக்கிறோம்.

அதிக மதிப்பெண் எடுப்பது !எப்படி ?... அதிக மதிப்பெண் எடுப்பது !எப்படி ?... Reviewed by Lankastudents on 10:39:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.